ஷிர்டி பாபாவின் 11 உபதேச மொழிகள்
ஷிர்டி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ
அவனுடைய துன்பங்கள் ஒரு முடிவை அடைந்து
சௌகரியத்தை அடைகிறான்.
துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில்
பெரும் துன்பத் திற்குள்ளானவர்க ளும்
மிகுதியான சந்தோஷத்தை அடைவார் கள்.
இவ்வுலகை விட்ட பிறகும்
நான் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
என்னுடைய மசூதி
என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வா தங்களையும்,
புத்திமதிக ளையும் கொடுக்கும்.
என்னுடைய பூத உடல்
என் மசூதியிலிருந்து பேசும்.
என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே
நான் மிகவும் சுறுசுறுப் பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
என்னிடம் வருபவர்களுக்கும் என்னைத் தஞ்சமாக அடைபவர்களுக்கும்
என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும்
நான் எப்பொழுதும் உயிருடனிருக்கிறேன்
நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாக்ஷிக்கிறேன்.
நீ என்பேரில் உன் பளுவைச் சுமத்தினால்
நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.
நீ
என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால்
அவைகளை உடனே நான் உனக்குக் கொடுப்பேன்.
என்னுடைய பக்தர்களுடைய வீட்டில்
ஒருபோதும் தேவை என்பதே இருக்காது.
No comments:
Post a Comment